Wednesday, 27 July 2016
gangai river in post office!!!
Tuesday, 26 July 2016
காட்சி தொடர்பியல் துறையின் தொடக்க விழா
Saturday, 23 July 2016
கபாலி திரைவிமர்சனம்
கதை கரு: மலேசிய தமிழ்ர்களுக்காக போரடும் தாதா…
டைரக்டர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஸ் நாரயணன்
கேமரா: முரளி
மலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலியாக வேலை பார்க்கும் தமிழர்களுக்காக ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்துடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றனர்.
அங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதைமருந்து கடத்துதல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொருப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துகட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார். அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறத்துபோனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்கின்றனர். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர்.
25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதைகடத்தல் கும்பல் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருப்பது அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும், குடும்பத்தோடு சேருவதும் மீதிக்கதை.
1).தமிழர்களை பற்றிய சில வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2).படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடியலையும் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
3).ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், கதை உருவமைப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
4).துப்பாக்கியை கையாளும் விதம் சில நேரங்களில் நகைச்சுவையாக உள்ளது.
சென்னையில் எடுக்கப்பட்ட பகுதி , ரஜினியின் கதாபாத்திரத்தையே உடைத்துவிட்டது. படத்தை மேலும் தொடர ஒரு நெருடலாகவே இருந்தது.
5).ஒரு சில நிகழ்வுகளை தவிர, கதை கரு எடுத்துக்காட்டிலே முடிந்துவிட்டது போல இருந்தது. தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதாகவே அமைந்துள்ளது, கபாலி. ஆக மலேசிய தமிழ் மக்களுக்காக போராடி சிறைசென்ற தாதா விடுதலையாகி குடும்பத்தை தேடுகிறார்… என்பதே கதை கரு.
6).தமிழ் மக்களை காப்பாற்றும் போராட்ட நிகழ்வு அதிகம் வைத்து குடும்ப தேடலை குறைத்திருந்தால் கபாலி வெற்றி பெற்றிருக்கலாம்.
7).என்னை கேட்டால் கபாலி வெற்றி பெறவில்லை என்றே கூறுவேன். எல்லாம் விளம்பரயுக்தி… மாயை…
8).கதை கருவே நன்றாக அமையவில்லை. இதற்கு போய் இப்படி ஒரு விளம்பரமா???
9).நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.
Tuesday, 8 March 2016
மகளிர் தினம்
மகளிர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகளிர் பற்றிய சாதனைகள்,சரித்திரங்கள்,சவால்கள்,சமுதாய பிரச்சனைகள்,இன்னல்கள் போன்ற பல பதிவுகள் கண்முன் வந்தது. அவற்றை எழுத்துக்களாக வடிவம் கொடுக்கும் போது வார்த்தை அற்றுபோனேன்.... என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் இதனை மட்டும் வரைய அருள்கிட்டியது.
அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்...
Thursday, 25 February 2016
STATE LEVEL WORKSHOP ON SCREEN PLAY
In St.Xavier’s college the visual communication students had State level workshop on screen play for two days from 23.02.2016 to 24.02.2016. On 23rd morning The Inauguration function of the workshop was held in the Department of Visual communication at St.Xavier’s college. Mr.Anto Kingsly the coordinator of the department of visual communication, Professors Mr.Vijay Rathina Kumar, Mr.Santhosh Kumar and Mr.doulous newbegin were presented in the Function. Miss.J.P Josephine Baba arranged this workshop. The Chief Guest is Mr.Bala Subramani,film director. He worked as the assistant director to Mr.Balu Mahendran in the film “THALAIMURAIKAL”. He is one of the student of Mr.Balu Mahendran’s institution. At present he is a freelance Advertising Director. The entire inauguration function was executed by the second year visual communication students. The prayer song was sung by Mr.Abish Vignesh. Ms.Keren Soruba gave a wonderful welcome speech. Mr.Antony Prince delivered a great introduction of the Chief Guest Mr.Bala Subramani. Rev.Dr.Fr.Sahaya raj S.J the vice principal of St.Xavier’s college inaugurated the workshop with an excellent speech. And Fr.Sahaya raj S.J presented a momentum to the Chief Guest. A thought provoking speech was given by Mr.Bala Subramani, the chief guest. Finally Ms.Hari Kamini Devi delivered the vote of thanks.
Thursday, 18 February 2016
"தமிழக தேர்தல்- 2016"
தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை ஆனால் இவர்கள் மக்களுக்கான தலைவர்களா என்பது கேள்விகுறி என்ற துவக்கதுடன் மாணவர்களிடயே சமுகத்தை பற்றிய உண்மைகளை எடுத்துவைத்தார். மேலும் தமிழகத்திலே நிகழும் பல்வேறு போராட்டங்கள் , தமிழகத்னை பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள் , இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு ,தமிழக இயற்கை வளம் , கல்வி , மருத்துவம் என்றும் அகில இந்திய கட்சிகள் மற்றும் தமிழக கட்சிகள் பற்றியும் தன்னுடைய உரையில் இன்றைய சமுக நிகழ்வுகளை தொடுத்தார் . தேர்தலின் போது மட்டும் நம்மை தேடுவோரிடம் நாம் பல கேள்விகளை கேட்க வேண்டும் . இதுவரை என்ன செய்தீர்கள் ? இனிமேல் என்ன செய்ய போறீர்கள் ? என்ற மேலான கருத்தை மாணவர்களின் மனதில் விதைத்துள்ளார் . மேலும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூரினர் . இல்ல மாணவர்களின் தலைவர் சதிஷ் குமார் சிறப்பு விருந்தினருக்கு அன்பளிப்பு வழங்கினார்.தலைவனாக சிறப்பு சொற்பொழிவு இல்ல இயக்குனர் சகாயராஜ் சே.ச அவர்களின் நன்ரிஉரைஉடன் இனிதே நிறைவேறிற்று .