பாளையங்கோட்டை , தூய சவேரியார் கல்லூரியில் (11.02.2016) மாலை 06:30 மணியளவில் தூய லூர்து அன்னை தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் தந்தை அருட்திரு.டேனிஸ் பொன்னையாS.J.துவக்கி வைத்தார். பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இயேசுசபை அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், சவேரியார் இல்ல மாணவர்கள், அன்னை தெரசா இல்ல மாணவிகள், திரு இருதய இல்ல மாணவர்கள், ஆசிரியப்பெருமக்கள், இறைமக்கள் என அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.
பவனியானது கல்லூரி வளாகத்தின் மையத்திலிருக்கும் லூர்து அன்னை கெபிக்கு வந்தடைந்தது. அங்கே அருட்தந்தை.பிரிட்டோ வின்சென்ட் அன்னை மரியாள் " இரக்கத்தின் முகம் ","தாயை போல பிள்ளை நூலை போல சேலை" என்று அருமையான மறையுறை ஆற்றி நற்கருனை ஆசிர்வாதம் வழங்கினாா் . அன்னை மரியாளின் பாதத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக ஜெபித்து இறையாசிர் பெற்றனர். இறுதியாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை.அமல்ராஜ் S.J அவர்கள் நன்றியுறை ஆற்றினார்.தூய லூர்து அன்னை தேர்பவனி இனிதே நிறைவேறிற்று.
No comments:
Post a Comment