Monday, 15 February 2016

நெஞ்சம் பொறுப்பதில்லையே...

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து...

       நெஞ்சம் பொறுப்பதில்லை
இந்த நிலை கெட்ட மானிடர்களை
           நினைக்கும் போது...

காதலை மட்டும் மையப்படுத்தும்
இயக்குனர்களை நினைக்கும் போது...

கவர்ச்சியை மட்டும் மையப்படுத்தும்
ஒளிர்பதிவாளர்களை நினைக்கும் போது...

பணத்தை மட்டும் மையப்படுத்தும்
தயாரிப்பாளர்களை நினைக்கும் போது...

புலன் உணர்வுகளை மட்டும் மையப்படுத்தும்
கதை ஆசிரியர்களை நினைக்கும் போது...

உடலை திரையிட்டு காட்டும்
கதாநாயகிகளை நினைக்கும் போது...

பிஸ்தாவாக தன்னை காட்டும்
கதாநாயர்களை நினைக்கும் போது...

No comments:

Post a Comment