Thursday, 11 February 2016

நம் மொழி

        இந்தி மொழி மற்றும் பிற மொழிகள் நம் சமுகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வந்தாரை வரவேற்பதுதான் தமிழரின் பண்பாடு, வந்தாராக மாறுவது இல்லை. ஆனால் தற்போது வந்தாராக மாறுவதாகவே நாகரீகமாக மாறிவிட்டது. இதனால் இந்தி மற்றும் பிற மொழி பேசும் சமுகத்திலிருந்து வந்த மக்களால் நம் சமுகம் பல சிதைவுகளை கண்டுள்ளது என்று வெளிப்படையாகவே கூறலாம். நாம் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சூழல் இது.

        நம் நாகரீக உடைக்கலாச்சாரம் , மொழிக்கலாச்சாரம் , உறவுக்கலாச்சாரம் பாதிப்படையும் நிலைக்கு அவர்களும் ஒரு காரணியாகதான் இருக்கிறார்கள். இன்னும் பல சிதைவுகள் நம் பண்பாட்டை அழித்துவருகின்றன. திட்டமிட்டே செயல்படுத்துவார்களோ?? எனும் எண்ணம் எழுகிறது. எளிமையாக கூறினால் ......

      இந்திமொழி நாடகங்கள் (serial ) தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து நம்மை மாற்றிவருகிறது. மதுபாலா எனும் நாடகத்தை பார்த்து தமிழ்நாட்டு ஜவுளிக்கடைகளில் மதுபாலா சுடிதார் ஏகபோகமாக விற்கப்பட்டது. அதன்பின் மதுபாலா சுடிதார் விளம்பரதுறையிலும் பின் திறைத்துறையிலும் நுழைந்தது. பெரியவர்கள் தொடங்கி 4 வயது சிறுகுழந்தைகள் உட்பட மதுபாலா சுடிதார் பிரபலமாக்கப்பட்டது. ஏன்.... திருமணமான புது பெண்கள் இப்போது வரவேற்புக்கு ( Reception ) மதுபாலா சுடிதாரைத்தை உடுத்துகிறார்கள். ஒரு நாடகத்தால் மட்டும் இந்த தாக்கமென்றால் இன்னும் பல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நம் தொலைக்காட்சியிலே நடைபெறுகிறது.

       இந்த செய்தியை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென தெரியவில்லை ஏனெனில் இதன் நீட்ச்சி ஒவ்வொன்றாக வளர்ந்துகொண்டே செல்கிறது. நாம்தான் விளிப்போடு இருந்து எதனை வாங்குவது ,எதனை வாங்ககூடாது மற்றும் எதனை ஆதரிப்பது எதனை ஆதரிக்ககூடாது என்று சிந்தித்து செயல்படவேண்டும். நல்லதை பயன்படுத்த வேண்டும் அந்த நல்லதையே நம் பிள்ளைகளுக்கும் விட்டுசெல்லவேண்டும்...

Monday, 1 February 2016

ஆசிரியர்களே..

     

                 எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து தூக்குவது போலவும் இருந்தது.  மேலைநாடு மேலைநாடு என்கிறீர்களே உங்கள் மேலைநாடுகளில் ஆசிரியர்களை இப்படியா நடத்துகிறார்கள்?

                நம்ம ஆட்சியாளர்களை யாரோடு ஒப்பிடன்னு தெரியல.வாச்சதும் அப்படித்தான் இருக்கு, வந்ததும் அப்படித்தான் இருக்கு... தேர்தல் வேற வரப்போகுது.யாருக்கு ஓட்டுபோடன்னு தெரியல... 49ஒ தானா!!!

Thursday, 28 January 2016

"கொல்ல வரும் ஸ்மார்ட் சிட்டி"

           ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

       இந்த 98 நகரங்களும் 5ஆண்டு காலத்தில் திறன்மிகு நகரங்களாக உருவாக்கப்படும். இவற்றில் 24 நகரங்கள் மாநில தலைநகரங்கள் , 24 தொழில் வர்த்தக நகரங்கள்,18 கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த நகரங்கள்,5 துறைமுக நகரங்கள், 3 கல்வி மற்றும் மருத்துவம் சார் நகரங்கள் அடங்கும்.

        இளம் இந்தியாவின் பேராவலை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கபபடும். இந்திய மக்களின் பொருளாதாரம், உழைப்பு, மதிப்பு போன்றவற்றை உயர்த்தும் அருமையான திட்டங்கள். கேட்க நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்ததை பேர் தங்கள் கைவரிசையை காட்டப்போகிறார்கள் என்று...

       " தனி ஒருவன் " படத்தில் வரும் வசனம் என் நினைவுக்கு வருகிறது. எந்த ஒரு பெரிய விசயத்துக்கு முன்னாலையும் ஒரு சின்ன விசயம் இருக்கு. ஆக ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்துறதால இந்ததிட்டத்தின் அதிகாரகளுக்கு நிச்சயம் லாபம் வரப்போகிறது. இல்லைன்னா "MAKE IN INDIA " வுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைப்பதாக கூட இருக்கலாம்.

         ஸ்மாட் சிட்டின்னு தடையில்லாமல் மின்சாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, குழாய் குடிநீர், தரமான தொலைதொடர்பு , நிலம்ன்னு எல்லாவற்றையும் நம் கண்முன்னே செயல்படுத்துவார்கள். அதேப்போல நம் கண்முன்னே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பார்கள். ஏற்கனவே நம் ஊரில் இருக்கிற வெளிநாட்டு நிறுவனஙாகளால் நம் நீர் வளம் (தாமிரபரணி), நில வளம் (கனிமங்கள்), மின்சாரங்கள் , காற்று மாசுபாடு , பொருளாதாரம் , குடிசை தொழில் பாதிப்பு, சுரண்டல்னு பல சீர்கேடுகள் நடக்கிறது. இதுல இப்புடி புதுசா செய்தால்  நாம் என்ன செய்வது? வழக்கமா அமைதியா இருக்கிறமாதிரி நாம் இப்போது இருக்க கூடாது.

         ஒரு உண்மை என்னவெனில் "MAKE IN INDIA" , "SMART CITY" போன்ற திட்டங்களை ஆதிக்கும் அதிகாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனபதே. சும்மாவே ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க , இப்ப சொல்லவா வேண்டும்???

   ஆக ஸ்மார்ட் சிட்டி நகரத்திற்கு ஏதோ வழியில் , ஏதோ ஒரு முறையில் உள் நோக்கங்கள், உள் திட்டங்ள் இருப்பது நிச்சயம்...

     நகர்புற மக்கள் தொகை 40 கோடியிலிருந்து, 2050-ல் 81.4 கோடியாக உயரும். தீவிர நகர்மயமாதலை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எதிர்நோக்கியுள்ளது. சீன மக்களுக்கு வேலையே நகர்புறங்களில்தான் ஆனால் இந்தியாவுக்குஅப்படியில்லை. இந்தியா என்றாலே விவசாயம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ". இந்த இரு நாடுகளையும் ஒப்பிடுவது சரியல்ல . விவசாயத்தை அழிக்க நினைக்கும் புதிய முயற்சி இது. விவசாயத்துக்கு எதிரா இருக்கிற பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் உள்நோக்கம் பற்றி தெரியவாய்ப்புள்ளது.

      நகர்புற மேம்பாட்டு துறையின் கீழ் வேளாண்மை மேம்பாட்டு துறை தூங்குகிறதா? அல்லது தூங்க வைக்கப்பட்டதா??? யாருக்கு தெரியும். நமக்கு மகிழ்சியான வாழ்வுக்கு நகரமா ? கிராமமா?ன்னு பட்டிமன்றங்கள்தான் வைக்கதெரியும்!!! கேபப்படாதீர்கள் ஆனால் உண்மை அதுதான்.

      முதல்ல மற்ற நாடுகளுடன் நம்ம நாட்டை ஒப்பிடுவதை நிறுத்துவோம். நம்ம நாட்டு வளங்களை நாம் பயன்படுத்தி நம்ம நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவோம். விவசாயத்துக்கு தடையாக நிற்கும் திட்டங்களை எதிப்போம்.

Wednesday, 20 January 2016

ஆடைக்கலாச்சாரம்

               நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எழும்பியது. அந்த உடை மாதிரியை இந்த குறுஞ்செய்தியினுடன் சேர்ப்பதர்க்காக Google imageல் தேடினேன். அங்கே நான் கண்ட ஆடைகள் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஆடைக்கலாச்சாரம் பற்றி பேசும் போது எனக்கு மனது உருத்தவில்லை. ஆனால் கண்முன்னே காணும் போது மிகவும் கொடுமையாக இருந்தது. அந்த ஆடையை மட்டும்தான் என்னால் வரைய முடிந்தது.அதனுள் இருந்த வடிவமைப்புக்கள் மிகவும் கொடுமை.
    
           எப்படி இத்தகைய ஆடைகளை வாங்குகிறார்கள்?

           துணிக்கடைக்கு செல்லும் போது பெற்றோர்களும் கூடவே இருப்பார்கள்தானே?

           ஒரு வேளை அந்த பெண்னுக்கு அம்மா தவறியிருப்பார்களோ?

            அப்பா அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்களோ?

            அந்த பெண்ணுக்கு அண்ணன்,தம்பி இருக்கமாட்டார்களோ? இன்னும் பெரியவர்கள் ,தோழிகள் ,உறவினர்கள் என்று அதிக கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

            பல துறைகளில் பெண்கள் சாதனைப்படைத்து சமநிலையடைந்து வருகிறார்கள்.ஆனால் பெண்களுக்கான தற்போதைய ஆடைக்கலாச்சாரம் என்பது சமநிலையல்ல. பெண்களுக்கான ஆடைக்கலாச்சாரம் என்று பேசும்போது ஆண்களுக்கும் இது பொருந்தும்.ஆனால் சமுதாயத்திலே பெண்களுக்கு வரலாறுதொட்டு பாரம்பரியம் உள்ளது.

            இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெறும் வியாபார சந்தை. ஆனால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் "இந்தியாவே உயிர்". வியாபாரிகள் பலவற்றை நம் மண்ணில் விற்பனை செய்கின்றனர். அவற்றை ஆதரிக்கும்படி செய்தால் நாம்தான் பாதிக்கப்படுவோம்.நம் கலாச்சாரம்தான் பாதிக்கப்படும்.

            ஆடைக்கலாச்சாரம் என்று பேசும் ஒவ்வொருவரும் பன்னாட்டு ஆடைகளை தவிர்த்தால் மட்டுமே நம் கலாச்சாரம் பாதிக்கப்படாது.

Tuesday, 29 December 2015

புத்தாண்டு தீர்மானம்


             பெரியவங்க வழக்கமா சொல்லுவாங்க… புது வருசம் பிறக்கும் போது ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்த விடனும்னும் அதுமட்டும்ல்ல ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை கத்துக்கிடனும்னு சொல்லுவங்க…என்னப்பா… அப்புடி என்ன கெட்ட பழக்கம் எண்ட இருக்குன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கீங்களா? அது சின்ன விசயமாக கூட இருக்கலாம்? இல்ல ரொம்ப சாதாரணமான விசயமாக கூட இருக்கலாம்.

             நம்ம உடலுக்கு மனசுக்கு மட்டும் இல்ல, நம்ம பழக்கத்தால குடும்பம், இயற்கை, சமுகம் ஏன் நம்ம நாட்டு அரசியல கூட மாத்தகூட சக்தி நம்முடைய பழக்கவழக்கத்துக்கு உண்டுன்னு சொன்னா உங்களால நம்பமுடிதா? நம்ம பழக்கவழக்கங்கள் இப்புடிகூட இருக்கலாம்…

பிளாஸ்டிக்:

         2,3 நாளுள நாம கிலோகணக்குல பிளாஸ்டிக் உபயோகிக்கிறது உங்களுக்கு தெரியுமா? 3ரூ ,2ரூபான்னு வாங்குற பேனா கூட பிளாஸ்டிக்தான். மளிகை கடைக்கு போய்ட்டு பொருள்களை கொண்டுவர கடைகாரண்ட சண்டபோட்டு வாங்குற பைகூட பிளாஸ்டிக்தான். கடைல டீ , காபி குடிக்கிறதும் இப்ப பிளாஸ்டிக் கப்புதான் .ஜவுளி கடை ,மருந்துக்கடை, ஹோட்டல்னு போனா பிளாஸ்டிக்தான… தவிர்க்கமுடியாத பொருள்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தலாம் ஆனால் மாற்று வழிகள் இருந்தும் அதிகமாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம் என்பதை சிறிது யோசித்தால் புரியும்…

உள்நாட்டு பொருள்கள்:

            உணவு,உடை என்று வெளிநாட்டு மோகத்தில் மிதந்துகொண்டிருக்கும் நாம் நிச்சயம் இதை பற்றி சிந்திக்கவேண்டும். ஒரு வெளிநாட்டு உணவு பொருளையோ உடையையோ வாங்குவதால் எத்தனையோ உள்நாட்டு பொருள்கள் முடக்கப்படுகிறது. அதனால் எத்தனையோ குடும்பங்களில் உணவு இல்லாமல் போகிறது. ஒருமுறை சூப்பர்மார்கெட் சென்று பொருள்வாங்கும் நம்மால் மளிகை கடை, காய்கறி கடை, ஹோட்டல், மொபைல் கடை, மொபைல் ரீசார் கடை, பூக்கடை என்று இன்னும் பல நம் ஊர்மக்கள் வைத்திருக்கும் குடிசை தொழில்கள் பாதிப்படைவதை அறிந்திருக்கிறோமா? தாகம் வந்த உடனே ஒரு வாட்டர் கேன் வாங்குகிறோம், அதற்கு பின்னால் எத்தனை மாவட்டங்களின் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது என தெரியுமா?

சிறு நடை போடுவோம்:

           காலையிலும் மாலையிலும் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் வியாதியை போக்கவோ நடக்கிறோமே அதை ஏன் தொடர்ந்து செய்யகூடாது. அல்லது நடக்குறதுக்குன்னு ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? கொஞ்சம் நம்ம இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விட்டு இறங்குவோம். சிறு நடை போடுவோம். நம்ம உடலுக்கு மட்டுமல்ல சுற்றுசூழலும் நல்லா இருக்கும்.

மின்சாரம்:

        இலவசமா கிடைக்கிற சூரிய சக்திய பயன்படுத்தி உங்க பர்ச பெரிசாக்குங்க… தேவைப்படுகிற இடத்துல மட்டும் மின்விளக்குகளை பயன்படுத்தினால் பண சேமிப்பு சாத்தியம் தான…

புகை நமக்கு பகை:

            இயற்கையை பாதிப்புள்ளாக்குபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனைதான். உடல் நலனுக்கு கேடுன்னு எங்க பார்த்தாலும் எழுதி ஒட்டிருக்காங்க ஆனா எங்க திரும்பினாலும் ஒரே புகையாதான் இருக்கு. வாகன புகை, தொழிற்சாலை புகை, ஹோட்டல் புகை, சிகரெட் புகைன்னு எல்லாத்தையும் குறைப்போம்.

 

நல்லத குடிப்போம்:

           நம்ம ஊர்ல குடிக்கிறதுக்கு பஞ்சமே இல்ல. அரசாங்கமே குடிப்பதை ஆதரிக்கிற சூழலில் நாம் வாழுகிறோம். சரி அதவிடுங்க… குடிபோதையால் வருகிற தீமையை பற்றி நிறைய தெரிஞ்சவங்கதான் நாம். புதுசா ஒன்னுமில்லை. ஆனாலும் அதவிட்டு வெளியே வர முடியலையா? குடிக்கனும்னு தோனும்போதெல்லாம் சின்ன பிள்ளைகள் கூடபோயி அவங்ககூட விளையாடலாம் அல்லது காமெடி பாக்கலாம். குடிப்போம் நல்லதையே குடிப்போம்.

வாசிப்போம்:

           புத்தகத்திற்காக செலவிடுவது வீண்ணாகாது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழனும்னா நிறைய புத்தகங்களை வாசிப்போம்… வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதைப் போல இன்னும் நிறைய பழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்… அவற்றையெல்லாம் இனங்கண்டு களை எடுப்போம். புதிய ஆண்டு நம்மை புதிப்பிக்கட்டும்… புது மனிதர்களாவோம்…

முதலில் நம்மை மாற்றுவோம், சமுதாயம் தானாக மாறும் ஏன்னா நாமதான் சமுதாயம்...

Saturday, 26 December 2015

கிறிஸ்துமஸ் செய்தி

உலகத்தையே படைத்தாளும் இறைவன் தன் மக்களுக்காக மனிதருள் மனிதராக இம்மண்ணுலகில் பிறந்தார் என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இறைமகன் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக ஒரு ஏழையாக பிறந்தார். இன்று அவர் பிறப்பதற்கு அந்த மாட்டுத்தொழுவம் கூட எளிமையாக இல்லை. அதற்காக அவர் பிறக்காமல் இல்லை.

இயேசு என்று பிறந்தார்? என்று கேட்டால் அனைவரும் டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார் என்போம். ஆனால் இயேசு ஏற்கனவே (இம்மாத தொடக்கத்திலே) பிறந்துவிட்டார்.ஆம், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒவ்வொரு மனிதருள்ளும் இயேசு ஏற்கெனவே பிறந்துவிட்டார்.

Credit Card, Pan Card, Car, Bike, Job- என்று சொகுசாக இருந்தவர்கள் இட்லிக்காகவும் Bread- க்காகவும் கையேந்தும் சூழல். Well Settle- ­­­­­­என்று மாருதட்டி கொண்டவர்கள் ஹெலிகாப்டர்களையும் படகுகளையும் பார்க்கும்போது நெஞ்சுக்குழியிலிருந்து குரல் எழுப்பும் சூழல்.சென்னையில என்ன இல்ல? எல்லாமே இருக்கு என்று படிப்பை முடித்தவுடன் வேலைக்காக சென்னை சென்ற அனைவரும் இப்போது ஒதுங்க இடம் கிடைக்காதா என தவிக்கும் சூழல்.

இந்த சூழ்நிலைகளிலே மாபரன் இயேசு பிறக்கிறார். சென்னைவாசிகளை காப்பாற்ற உணவு பொருள்கள் வழங்க, உடைகள், மருந்து வசதி என்று தன்னார்வத்தோடு பல இளைஞர்கள் களம் இறங்கினார்கள். பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள். அங்கே அவர்களுக்குள்ளே இயேசு பிறந்திருக்கிறார். தன்னார்வத்தோடு உடல் உழைப்பு செய்தவர்கள், பல்வேறு வழிகளில் உணவு உடை வழங்கிய அனைவரினுள்ளும் அவர் பிறந்துள்ளார். பல தடைகளையும் உடைத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து கொண்டுள்ளார், ஜாதி மதமின்றி ஏழை பணக்காரரின்றி, உயர்ந்தவர் தாழ்ந்தவரின்றி எல்லாரையும் மீட்டுள்ளார், எல்லாரையும் காப்பாற்றியுள்ளார்.

படைப்பிலே சிறந்த படைப்பாகிய நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியுள்ளார். இதைத் தான் திருவிவிலியம் கூட அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. மத்தேயு 16:26 ல் “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கி கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதை கொடுப்பார்?

என்ன வேண்டும்? நமக்கு என்ன வேண்டும்? வாழ்வின் ஆதாரத்தை விட்டுவிட்டு நுனிப்புல்லை மேயும் பசுவை போல இருக்கிறோம். நம் ஆன்மாவை பலப்படுத்த என்ன செய்வது? பிறருக்கு கடினமான நேரத்தில் கேட்காமல் உதவி செய்தல் வேண்டும். அது பொருளாதார உதவி என்று மட்டும் இல்லை. அரவணைத்தல், அன்பு காட்டல், உடனிருத்தல் என்று கூட இருக்கலாம்.

எப்போதெல்லாம் பிறரின் கடினதருணத்தில் உதவி செய்ய முற்படுகிறோமோ அப்போதொல்லாம் நாம் ஆன்மாவை பலப்படுத்துகிறோம். அப்போதொல்லாம் இயேசு பிறக்கிறார்.

இறை இரக்கத்தின் ஆண்டில் பயணித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நம் இரக்கச் செயலால் இயேசுவை இம்மண்ணுலகில் பிறக்கச் செய்வோம், இறை இரக்கத்தின் தூதுவர்களாவோம். சென்னையில் தன்னார்வத்தோடு உதவி செய்து விண்ணக இயேசு கிறிஸ்துவை மண்ணகம் கொண்டுவந்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றி. அவர்களை மையப்படுத்தியே எனது கல்லூரி விடுதியில் குடில் செய்தோம்.

ஆம் இறை இரக்கத்தால் பிறக்கின்ற இயேசுவின் குடிலை தயாரித்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். எனது வாழ்வின் இரக்கச்செயல்களின் தரத்தினை ஆராய உதவி செய்தது. ஆக, இரக்கச் செயல்கள் புரிவோம்;இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்…