பெரியவங்க வழக்கமா சொல்லுவாங்க… புது வருசம் பிறக்கும் போது ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்த விடனும்னும் அதுமட்டும்ல்ல ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை கத்துக்கிடனும்னு சொல்லுவங்க…என்னப்பா… அப்புடி என்ன கெட்ட பழக்கம் எண்ட இருக்குன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கீங்களா? அது சின்ன விசயமாக கூட இருக்கலாம்? இல்ல ரொம்ப சாதாரணமான விசயமாக கூட இருக்கலாம்.
நம்ம உடலுக்கு மனசுக்கு மட்டும் இல்ல, நம்ம பழக்கத்தால குடும்பம், இயற்கை, சமுகம் ஏன் நம்ம நாட்டு அரசியல கூட மாத்தகூட சக்தி நம்முடைய பழக்கவழக்கத்துக்கு உண்டுன்னு சொன்னா உங்களால நம்பமுடிதா? நம்ம பழக்கவழக்கங்கள் இப்புடிகூட இருக்கலாம்…
பிளாஸ்டிக்:
2,3 நாளுள நாம கிலோகணக்குல பிளாஸ்டிக் உபயோகிக்கிறது உங்களுக்கு தெரியுமா? 3ரூ ,2ரூபான்னு வாங்குற பேனா கூட பிளாஸ்டிக்தான். மளிகை கடைக்கு போய்ட்டு பொருள்களை கொண்டுவர கடைகாரண்ட சண்டபோட்டு வாங்குற பைகூட பிளாஸ்டிக்தான். கடைல டீ , காபி குடிக்கிறதும் இப்ப பிளாஸ்டிக் கப்புதான் .ஜவுளி கடை ,மருந்துக்கடை, ஹோட்டல்னு போனா பிளாஸ்டிக்தான… தவிர்க்கமுடியாத பொருள்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தலாம் ஆனால் மாற்று வழிகள் இருந்தும் அதிகமாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம் என்பதை சிறிது யோசித்தால் புரியும்…
உள்நாட்டு பொருள்கள்:
உணவு,உடை என்று வெளிநாட்டு மோகத்தில் மிதந்துகொண்டிருக்கும் நாம் நிச்சயம் இதை பற்றி சிந்திக்கவேண்டும். ஒரு வெளிநாட்டு உணவு பொருளையோ உடையையோ வாங்குவதால் எத்தனையோ உள்நாட்டு பொருள்கள் முடக்கப்படுகிறது. அதனால் எத்தனையோ குடும்பங்களில் உணவு இல்லாமல் போகிறது. ஒருமுறை சூப்பர்மார்கெட் சென்று பொருள்வாங்கும் நம்மால் மளிகை கடை, காய்கறி கடை, ஹோட்டல், மொபைல் கடை, மொபைல் ரீசார் கடை, பூக்கடை என்று இன்னும் பல நம் ஊர்மக்கள் வைத்திருக்கும் குடிசை தொழில்கள் பாதிப்படைவதை அறிந்திருக்கிறோமா? தாகம் வந்த உடனே ஒரு வாட்டர் கேன் வாங்குகிறோம், அதற்கு பின்னால் எத்தனை மாவட்டங்களின் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது என தெரியுமா?
சிறு நடை போடுவோம்:
காலையிலும் மாலையிலும் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் வியாதியை போக்கவோ நடக்கிறோமே அதை ஏன் தொடர்ந்து செய்யகூடாது. அல்லது நடக்குறதுக்குன்னு ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? கொஞ்சம் நம்ம இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விட்டு இறங்குவோம். சிறு நடை போடுவோம். நம்ம உடலுக்கு மட்டுமல்ல சுற்றுசூழலும் நல்லா இருக்கும்.
மின்சாரம்:
இலவசமா கிடைக்கிற சூரிய சக்திய பயன்படுத்தி உங்க பர்ச பெரிசாக்குங்க… தேவைப்படுகிற இடத்துல மட்டும் மின்விளக்குகளை பயன்படுத்தினால் பண சேமிப்பு சாத்தியம் தான…
புகை நமக்கு பகை:
இயற்கையை பாதிப்புள்ளாக்குபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனைதான். உடல் நலனுக்கு கேடுன்னு எங்க பார்த்தாலும் எழுதி ஒட்டிருக்காங்க ஆனா எங்க திரும்பினாலும் ஒரே புகையாதான் இருக்கு. வாகன புகை, தொழிற்சாலை புகை, ஹோட்டல் புகை, சிகரெட் புகைன்னு எல்லாத்தையும் குறைப்போம்.
நல்லத குடிப்போம்:
நம்ம ஊர்ல குடிக்கிறதுக்கு பஞ்சமே இல்ல. அரசாங்கமே குடிப்பதை ஆதரிக்கிற சூழலில் நாம் வாழுகிறோம். சரி அதவிடுங்க… குடிபோதையால் வருகிற தீமையை பற்றி நிறைய தெரிஞ்சவங்கதான் நாம். புதுசா ஒன்னுமில்லை. ஆனாலும் அதவிட்டு வெளியே வர முடியலையா? குடிக்கனும்னு தோனும்போதெல்லாம் சின்ன பிள்ளைகள் கூடபோயி அவங்ககூட விளையாடலாம் அல்லது காமெடி பாக்கலாம். குடிப்போம் நல்லதையே குடிப்போம்.
வாசிப்போம்:
புத்தகத்திற்காக செலவிடுவது வீண்ணாகாது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழனும்னா நிறைய புத்தகங்களை வாசிப்போம்… வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதைப் போல இன்னும் நிறைய பழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்… அவற்றையெல்லாம் இனங்கண்டு களை எடுப்போம். புதிய ஆண்டு நம்மை புதிப்பிக்கட்டும்… புது மனிதர்களாவோம்…
முதலில் நம்மை மாற்றுவோம், சமுதாயம் தானாக மாறும் ஏன்னா நாமதான் சமுதாயம்...
No comments:
Post a Comment