நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எழும்பியது. அந்த உடை மாதிரியை இந்த குறுஞ்செய்தியினுடன் சேர்ப்பதர்க்காக Google imageல் தேடினேன். அங்கே நான் கண்ட ஆடைகள் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஆடைக்கலாச்சாரம் பற்றி பேசும் போது எனக்கு மனது உருத்தவில்லை. ஆனால் கண்முன்னே காணும் போது மிகவும் கொடுமையாக இருந்தது. அந்த ஆடையை மட்டும்தான் என்னால் வரைய முடிந்தது.அதனுள் இருந்த வடிவமைப்புக்கள் மிகவும் கொடுமை.
எப்படி இத்தகைய ஆடைகளை வாங்குகிறார்கள்?
துணிக்கடைக்கு செல்லும் போது பெற்றோர்களும் கூடவே இருப்பார்கள்தானே?
ஒரு வேளை அந்த பெண்னுக்கு அம்மா தவறியிருப்பார்களோ?
அப்பா அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்களோ?
அந்த பெண்ணுக்கு அண்ணன்,தம்பி இருக்கமாட்டார்களோ? இன்னும் பெரியவர்கள் ,தோழிகள் ,உறவினர்கள் என்று அதிக கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.
பல துறைகளில் பெண்கள் சாதனைப்படைத்து சமநிலையடைந்து வருகிறார்கள்.ஆனால் பெண்களுக்கான தற்போதைய ஆடைக்கலாச்சாரம் என்பது சமநிலையல்ல. பெண்களுக்கான ஆடைக்கலாச்சாரம் என்று பேசும்போது ஆண்களுக்கும் இது பொருந்தும்.ஆனால் சமுதாயத்திலே பெண்களுக்கு வரலாறுதொட்டு பாரம்பரியம் உள்ளது.
இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெறும் வியாபார சந்தை. ஆனால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் "இந்தியாவே உயிர்". வியாபாரிகள் பலவற்றை நம் மண்ணில் விற்பனை செய்கின்றனர். அவற்றை ஆதரிக்கும்படி செய்தால் நாம்தான் பாதிக்கப்படுவோம்.நம் கலாச்சாரம்தான் பாதிக்கப்படும்.
ஆடைக்கலாச்சாரம் என்று பேசும் ஒவ்வொருவரும் பன்னாட்டு ஆடைகளை தவிர்த்தால் மட்டுமே நம் கலாச்சாரம் பாதிக்கப்படாது.
No comments:
Post a Comment