Saturday, 26 December 2015

கிறிஸ்துமஸ் செய்தி

உலகத்தையே படைத்தாளும் இறைவன் தன் மக்களுக்காக மனிதருள் மனிதராக இம்மண்ணுலகில் பிறந்தார் என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இறைமகன் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக ஒரு ஏழையாக பிறந்தார். இன்று அவர் பிறப்பதற்கு அந்த மாட்டுத்தொழுவம் கூட எளிமையாக இல்லை. அதற்காக அவர் பிறக்காமல் இல்லை.

இயேசு என்று பிறந்தார்? என்று கேட்டால் அனைவரும் டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார் என்போம். ஆனால் இயேசு ஏற்கனவே (இம்மாத தொடக்கத்திலே) பிறந்துவிட்டார்.ஆம், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒவ்வொரு மனிதருள்ளும் இயேசு ஏற்கெனவே பிறந்துவிட்டார்.

Credit Card, Pan Card, Car, Bike, Job- என்று சொகுசாக இருந்தவர்கள் இட்லிக்காகவும் Bread- க்காகவும் கையேந்தும் சூழல். Well Settle- ­­­­­­என்று மாருதட்டி கொண்டவர்கள் ஹெலிகாப்டர்களையும் படகுகளையும் பார்க்கும்போது நெஞ்சுக்குழியிலிருந்து குரல் எழுப்பும் சூழல்.சென்னையில என்ன இல்ல? எல்லாமே இருக்கு என்று படிப்பை முடித்தவுடன் வேலைக்காக சென்னை சென்ற அனைவரும் இப்போது ஒதுங்க இடம் கிடைக்காதா என தவிக்கும் சூழல்.

இந்த சூழ்நிலைகளிலே மாபரன் இயேசு பிறக்கிறார். சென்னைவாசிகளை காப்பாற்ற உணவு பொருள்கள் வழங்க, உடைகள், மருந்து வசதி என்று தன்னார்வத்தோடு பல இளைஞர்கள் களம் இறங்கினார்கள். பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள். அங்கே அவர்களுக்குள்ளே இயேசு பிறந்திருக்கிறார். தன்னார்வத்தோடு உடல் உழைப்பு செய்தவர்கள், பல்வேறு வழிகளில் உணவு உடை வழங்கிய அனைவரினுள்ளும் அவர் பிறந்துள்ளார். பல தடைகளையும் உடைத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து கொண்டுள்ளார், ஜாதி மதமின்றி ஏழை பணக்காரரின்றி, உயர்ந்தவர் தாழ்ந்தவரின்றி எல்லாரையும் மீட்டுள்ளார், எல்லாரையும் காப்பாற்றியுள்ளார்.

படைப்பிலே சிறந்த படைப்பாகிய நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியுள்ளார். இதைத் தான் திருவிவிலியம் கூட அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. மத்தேயு 16:26 ல் “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கி கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதை கொடுப்பார்?

என்ன வேண்டும்? நமக்கு என்ன வேண்டும்? வாழ்வின் ஆதாரத்தை விட்டுவிட்டு நுனிப்புல்லை மேயும் பசுவை போல இருக்கிறோம். நம் ஆன்மாவை பலப்படுத்த என்ன செய்வது? பிறருக்கு கடினமான நேரத்தில் கேட்காமல் உதவி செய்தல் வேண்டும். அது பொருளாதார உதவி என்று மட்டும் இல்லை. அரவணைத்தல், அன்பு காட்டல், உடனிருத்தல் என்று கூட இருக்கலாம்.

எப்போதெல்லாம் பிறரின் கடினதருணத்தில் உதவி செய்ய முற்படுகிறோமோ அப்போதொல்லாம் நாம் ஆன்மாவை பலப்படுத்துகிறோம். அப்போதொல்லாம் இயேசு பிறக்கிறார்.

இறை இரக்கத்தின் ஆண்டில் பயணித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நம் இரக்கச் செயலால் இயேசுவை இம்மண்ணுலகில் பிறக்கச் செய்வோம், இறை இரக்கத்தின் தூதுவர்களாவோம். சென்னையில் தன்னார்வத்தோடு உதவி செய்து விண்ணக இயேசு கிறிஸ்துவை மண்ணகம் கொண்டுவந்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றி. அவர்களை மையப்படுத்தியே எனது கல்லூரி விடுதியில் குடில் செய்தோம்.

ஆம் இறை இரக்கத்தால் பிறக்கின்ற இயேசுவின் குடிலை தயாரித்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். எனது வாழ்வின் இரக்கச்செயல்களின் தரத்தினை ஆராய உதவி செய்தது. ஆக, இரக்கச் செயல்கள் புரிவோம்;இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்…

தனியார் கம்பெனி பேருந்தோட...

உங்க இஸ்டத்துக்கு மாத்துரீங்க… கேக்க ஆள் இல்லைன்னு நினைசீங்கலா… இரண்டு நாளா பாத்துகிட்டு இருக்கேன்… அப்புடி என்ன வந்துச்சி் உங்களுக்கு… -என்று 48வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் தனியார் பேருந்து ஒட்னரிடம் நடுவீதியீல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.

அட அந்த தனியார் கம்பெனி பேருந்தோட போதும் போதும்னு ஆகுது. எல்லா வாகனங்களுக்கும் சாலையில் குறிப்பிட்ட வேகம் உண்டு. ஆனால் இந்த தனியார் பேருந்து ஒட்டுனர்களுக்கு மட்டும் முன்னால போர பஸ்ச எப்புடியாவது முந்திரனும்’’னு பிச்சி பிடிங்கிகிட்டு நிக்கிறாங்க. குறுக்க யார் வந்தாலும் கவலையில்லை. ஆஸ்பத்திரி பகுதியோ, பள்ளி பகுதியோ, என்ற அக்கறை இல்லை பேருந்தினுள் பல உயிர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமில்லை. என்னம்மோ, அவங்க வீட்டு சொத்த களவாடிட்டு போகுறவன பிடிக்க போகிறமாதிரி வண்டி ஓட்டுகிறார்கள்.

பல நாள்கள் கவனித்தது உண்டு.சீக்கிரமா போகுறதுக்காகவேண்டி சரியான நிறுத்ததுல பயணிகள இறக்கிவிடாம முன்னாடி நிக்குற பேருந்த முந்திகிட்து வண்டிய குறுக்க விடுவாங்க… இவரும் வண்டிய எடுக்கமாட்டார், பின்னால இருக்கிறவங்களையும் வண்டிய எடுக்கவிடமாட்டார்… பயணிகளையும் சரியான இடத்துல இறக்கிவிடமாட்டார்… வண்டில எல்லா சீட்டுலயும் ஆள் இறுப்பாங்க… ஆனாலும் வண்டிய எடுக்கமாட்டங்க… வண்டி ஆக்சிலரேட்டர அலுத்திவிட்டுகிட்டே இருப்பாங்க… ஹாரன அடிச்சிகிட்டே இருப்பாங்க… வண்டில இருந்து அப்புடி ஒரு புகை வரும்… சுற்றுசூழலையும் கெடுத்துடுவாங்க… பஸ்சுக்குள்ள இருக்கிறவங்க மன ரீதியாக பாதிப்படையவும் செய்வாங்க…

இதுமட்டுமல்ல வழியில யாரு எங்க கையகாட்டி வண்டிய நிறுத்துங்கன்னு சொன்னாலும் உடனே வண்டிய நிறுத்தி ஆள் ஏத்துவாங்க… தனியார் பேருந்துகளை எல்லா இடத்துலயும் நிக்ககுடாதுன்னும் அப்புடியே நிப்பாட்டினா 2500 ரூபாய் அபராதம்னு சட்டம் போட்டதா ஒட்டுனர் சொன்னார்.ஒரு மாதம் இந்த சட்டம் அமர்களமாக போயிட்டு இருந்தது. “பழைய குருடி கதவதிறடினு சொல்லுற மாதிரி மறுபடியும் அவங்க ஆரம்பிச்சிட்டாக்க…

அதே வழிதடத்துல போகிற அரசு பஸ் ஓட்டுனரிடன் மனநிலை அப்படியே இதற்கு எதிர்பதம். அவங்க ரொம்ப எளிமையாக நடந்துகொள்வாங்க. சரியா பயணிகளை இறக்கிவிடுவாங்க. வண்டிய அதிவேகமா ஓட்டமாட்டங்க… தனியார் வண்டி வேகமா வந்தா உடனே வழிவிட்டுவிடுவாங்க..

அப்புறம் ஏன் எல்லாரும் தனியார் பேருந்துல ஏறுகிறாங்கன்னு, எனக்கு ஒரு குழப்பம். சில பேரிடம் கேட்டேன். அவங்க எல்லாரும் சொல்லுறது ஒரே மாதிரிதான் இருந்தது. விலை கொஞ்சம் குறைவு, சில்லரை பிரச்சனை அதிகம் வருவது இல்லை, நல்லா புதுபட பாட்டு போடுவாங்க…

இப்படி ஒரு சில காரணங்களால் மக்கள் இன்னும் தனியார் பேருந்தை விரும்புகிறார்கள். ஆனால் தனியார் பேருந்தினால் பயணிகள் மனரீதியான பாதிப்புகள், அதிவேகத்தால் ஏற்படும் பயம், தடினமான ஒலி எழுப்பியால் மன அழுத்தம், போட்டி மனப்பான்மை உருவாகுதல் என இன்னும் பல தீமைகள் இருப்பதை பயணிகள் அறிந்துகொள்ள வில்லை. அம்மாடியோ இதைப் பற்றி ஒரு ஆய்வை எடுத்து எனது மேற்கல்வியை முடித்துவிடலாம் போலிருக்கிறது.

என்னுடன் பயணித்த பயணி ஒருவர் கூறியது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் பயணிகளைவிட அதிக பயணிகளை ஏற்றி உரிமையாளருக்கு லாபம் கொடுத்தால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் குறிப்பிட்ட தொகை அதிகமாக கொடுக்கிறார்களாம்.

அந்த 48வயது பெண்மனி பார்ப்பதற்கு சாந்த குணமுடையவராக இருந்தார். ஆனால் இந்த செயலால் அவர் கோபமாக நடுதெரு என்று பாராது, இரவு 8:30 மணி என்று பாராது, சாலைகள் கூடும் இடம் என்று பாராது அந்த ஓட்டுநரை திட்டினார். தனது உரிமைக்காக போராடினார். அந்த பெண்மணி வந்த பேருந்தில் கூட்டம் குறைவு என்று திடீரென்று எல்லாரையும் வேறு பேருந்திற்கு அனுப்பிவிட்டு அந்த பேருந்து திரும்பிவிட்டது. அவ்வளவு நேரம்வரை யார் முதலில் செல்வது என்று போட்டிபோட்டுகிட்டு இருந்த அவர்கள் திடீரென இப்படியொரு செயல் செய்துவிட்டனர். அந்த பெண்மணி மட்டும் திட்டிக்கொண்டு வந்தார். இப்புடி பாதியில இறக்கிவிடுறதுக்கு மொதல்லயே ஒரு பஸ்ச எடுதிறுக்கலாம்னு ஆர்ம்பித்தது…தொடர்ந்து அடுத்த பேருந்தில் ஏறி அருகில் இருந்தவர்களிடம் இதைப் பற்றி பேசி ஓட்டுனர்களை திட்ட தொடங்கினார். ஆனா கூடவந்து, வேறு பேருந்தில் ஏறியவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். சாலையில் நின்றவர்கள் எல்லாரும் பாத்துகிடேதான் இருந்தார்கள். அவ்வளவு பெரிய முக்கியமான இடத்துல ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீங்க…

இதுபோல் இன்னும் பல தனியார் பேருந்துகள் நடுதெருவில் கூத்து நடத்திகொண்டுதான் உள்ளது. போக்குவரத்துக்காக எவ்வளவோ தொகை பட்ஜெட்டில் ஒதுக்குகிறார்கள்… எவ்வளவோ அதிகாரிகள் பணிசெய்கிறார்கள்… எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன… இவை எல்லாம் இருந்து என்ன பயனென்று தெரியவில்லை? உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

Friday, 11 December 2015

இந்திய வள குளிர்பானங்கள் 2015

40% ஜீ.எஸ்.டி வரியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 250 கோடி அமெரிக்கடாலர் முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கணக்கில் தினமும் பணம் ஈட்டுகின்ற குளிர்பானக்கம்பெனிகள் பல வகைகளில் ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றிவருகிறது.30 லட்சம் சில்லறை வணிகர்கள், ஆயிரக்கணக்கில் விநியோகஸ்தர்கள் பாதிப்படைவார்கள் என்று திசைதிருப்புகிறார்கள். இந்தியவளம் சுரண்டல், உடல்நலம் சீர்குளைத்தல், இந்திய குளிர்பானங்களின் முடக்கம்,சுற்றுசூழல் மாசுபாடு என்று பல சமூகபிரச்சனைகளை ஏற்படுத்துகிற குளிர்பானங்கள் இல்லாமல் இந்தியர்களால்  வாழமுடியும். அனைத்து ஊடகமும் சென்னை வெள்ளத்தை நோக்கிதிரும்பியிருக்கும் இச்சூழலில் இந்த செய்தி வெளிவருவது திட்டமிட்ட செயலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில அதிகாரிகள் தங்களின்  அதிகப்படியான  கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தும்முன், இந்த வரியை அரசு நிச்சயம் நடைமுறைபடுத்தவேண்டும். நாமமட்டும்  வாழ்ந்தால் போதாது நம்ம பிள்ளைகளும் வாழனும் ....

Thursday, 26 November 2015

திடீர் மனிதர்

            சில அறிகுறிகள் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னோடியாக அமையும். சில நேரங்களில் அந்த அறிகுறிகளை நாம் அறிகிறோம்;பல நேரங்களில் அவற்றை பற்றி நாம் அறிய முற்படுவதில்லை. உதாரணமாக கனவுகளின் மூலம் நம் வாழ்கையை பற்றிய முன்னோட்டங்கள் வெளிப்படும்.சில நேரங்களில் மனிதர்களின் மூலம் வெளிப்படும். யாரோ ஒருவர் நம் வாழ்கையில் திடீரென வருவார். அவரை பற்றி நாம் யோசித்திருக்கமாட்டோம்.
இந்தமனிதர் ஏன் என் வாழ்க்கையில் வருகிறார்?
எதற்காக இவரை நான் அடிக்கடி சந்திக்கிறேன்?    இவர் யார்? என்று
             அந்த புதிய மனிதரை பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை. அதனாலோ என்னவாே ,அவரும் நம் வாழ்க்கையின் திசைக்காட்டி என்பதை மறந்துவிடுகிறோம். திசைக்காட்டி ஒருவரை நேர்வழியிலும் நடத்தும்;அதே சமயம் எதிர் வழியிலும் நடத்தும்.இந்த கலி காலத்தில் நேர் வழியில் நடத்தி செல்லும் திசைக்காட்டிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். திடீரென வரும் ஒருவர், நம் வாழ்க்கை பாதையை திசைதிருப்பக்கூடியவராக இருப்பார்.   
             பொதுவாக எல்லோருக்கும் ஓர் எண்ணம் உண்டு. புதிய மனிதர்களிடம் பேசும் போது தன்னை பற்றிய விபரங்களை பெறுமையுடன் கூறிவிடுகிறார். அதன்பின் பரவாயில்லையே என்னுடைய நட்பு வட்டம் பெரிதாகியுள்ளதே!! என்று நினைத்துக்கொள்வார்கள். பிறரிடம் தன்னை பற்றி பகிர்ந்து கொண்டு நட்பை பெரிதாக்குவது தவறல்ல. ஆனால் அதுஅப்படி அமைவதில்லை, அந்த திடீர் மனிதர் ஏதோ ஒரு வழியில் அடிக்கடி நம் பாதையில் குறுக்கிடுவார். நமக்கே தெரியாமல் அவரிடமிருந்து சில கொள்கைகளை, கருத்துகளை, அனுகுமுறைகளை பின்பற்றுவோம்.அது நம்முடைய இயல்பு வாழ்க்கையை அப்படியே திசைதிருப்பிவிடும். தவறான அனுகுமுறைகளால், நம் இலக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். அதனைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்.  
             இலக்கு இதுதானே; என்னால் எளிமையாக சாதிக்க இயலும்; "நான் சாதிக்க பிறந்தவன்" என்று மாறுதட்டிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நம் இலக்கு அங்கே இடிந்துக்கொண்டிருக்கும்.இந்த வெளிப்பாடு திடீரென குறுக்கிட்ட ஒருவராலே. இப்படி தினமும் நம் வாழ்க்கையில் பலர் குறுக்கிடும் போது, நம் இலக்கு என்னவாகும்? பலரிடமிருந்து நாம் பல கொள்கைகளை அனுகுமுறைகளை உள்வாங்குகிறோம். ஒருவராலே நம் இலக்கு சிறிது சிதைந்துவிட்டதெனில் பலரால் நம் இலக்கு நிச்சயம் உடைந்துவிடும் அல்லது தவறான இலக்காக உருமாற்றம் பெறும்.
          "கூடாநட்பு கேடாய் விளையும்"-என்பது அறிஞர்களின் அமுதவாக்கு. இன்னும் ஆழமாக கூறினால் நாம் தினமும் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்து எண்ணங்களை(vibration) உள்வாங்குகிறோம்.  நம்மை அறியாமல் நடக்கும் இந்த செயல்கள், நாம் குறித்திருக்கும் இலக்கை சிதைத்துவிடுகிறது. சிதைந்த இலக்கை மீண்டும் சரி செய்வது எளிதான காரியமில்லை. ஆனால் முன்னதாகவே இந்த திடீர் மனிதர்களை பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருந்தால்  அவர்களை நம் வாழ்கையிலிருந்து களைய முடியும்: களைய வேண்டும்.நல்லது மட்டும் கற்றுக்கொள்வது கடினமானது என்றாலும், இதுதான் என்னுடைய இலக்கு, இதனை நிச்சயம் அடைவேன் என்ற உறுதிபாட்டிற்கு முன் அவை எளிமையே. ஆக எச்சரிக்கையாக இருப்போம்; திடீர் மனிதர்களால் நம் இலக்கு திசைதிரும்புவதை தடுப்போம்.

         திடீர் மனிதர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் சொல்லப்போனால்

      #  பேருந்தில் உடன் பயணிப்பவர்கள்
      #  சந்தையில் சந்திப்பவர்கள்
      #  பள்ளியில் உடன் பணிபுரிபவர்கள்
      #  கல்லூரியல் உடன் பணிபுரிபவர்கள்
      #  உடன் படிப்பவர்கள்
      #  கோயிலில் சந்திப்பவர்கள்
      #  கடைகளில் சந்திப்பவர்கள்
      #  அலுவலகத்தில்  உடன் பணிபுரிபவர்கள்
      #  சக மாணவர்கள்
      #  செய்திதாள் கொடுப்பவர்

                -என்று இன்னும் இப்பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்லக் கூடியது. நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களை மட்டும் நம் இதயத்தில் வைப்போம், மற்றவர்களை சாதாரணமாக மூளையில் வைப்போம். நம் பாதை என்றும் சரியாக அமையும். நம் இலக்கு என்றும் தெளிவாக அமையும். ஆம்... நம் இலக்கு நம் கைகளிலே இருக்கட்டும்.

Tuesday, 17 November 2015

திரைப்பட கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கா

           திரைப்படதுறையின் ஆற்றல் மிகவும் பெரியது. மக்களிடம் மிக எளிதாக அனுகும் ஊடகமும் இது தான்.இத்துறை தன்னக்கத்தே கொண்ட சக்தியினால் மக்களிடம் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடியது. தற்போது திரைக்கு வந்திருக்கும் மற்றும் ஏற்கனவே வந்த படங்கள் மக்களிடம் சில வகைகளில் விளிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருப்பினும் மது,சிகரெட் போன்ற முக்கியமான விளிப்புணர்வை முழுவதும் தெரிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் தரக்கூடியதே.

"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
புகைபிடித்தல் உடலுக்கு தீங்கானது"னு சொல்லிட்டு படத்தில் அதே காட்சிகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்...

            சொல்லனும்னா இன்னும் நிறைய சொல்லலாம் பெரியவங்க அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவாங்க ***முன்னேறு ஒழுங்கா இருந்தால்தான் பின்னால வருகிறதும் நல்லா இருக்கும் ***.திறன் கொண்ட திரைப்பட துறையினர் இன்னும் ஏன் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்கின்றன.
            
             தமிழகத்தில் மதுஒழிப்பு வேண்டுமானால் திரைப்படங்களில் மது காட்சிகள் வரக்கூடாதுதானே!!!சிகரெட் காட்சிகளும் கூடாதுதானே!!!அதிக இளைஞர்களை கவரக்கூடிய சக்திபடைத்த திரைப்படங்களுக்கு விதிமுறைகள் இல்லையா? அல்லது இருந்தும் கண்டுகொள்ளா நிலையா?
             இதுமட்டுமல்ல இப்ப நடிகைகளின் மூலம்  சிகரெட் குடிப்பது, பீர் அடிப்பது என்று புது கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது. நடிகர்களை பார்த்து தம் அடித்த இளைஞர்களை போல இனி கதாநாயகிகள் போல பீர் அடிக்கும் இளம்பெண்கள் உருவாகுவது நிச்சயமே...

             (கேட்டால் சமுகத்தில் நடப்பதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்பார்கள்) படைப்பாற்றலை கேமரா, எடிட்டிங் என்று நிறுத்திக்கொள்ளாமல் கதைகளிலும் காட்டினால் திரையுலகம் மட்டுமல்ல வருங்கால அப்துல்கலாம்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
  
             தமிழகத்தில் மது விலக்கு வேண்டுமானால் திரைபடத்துறையிலும் மதுவிலக்கு வேண்டும் சிகரெட் காட்சிகளும் ஒதுக்கப்பட வேண்டும்...

Monday, 2 November 2015

கல்லறையில் கேட்டது

ம்ம்ம்...
இது எங்க அப்பா
இது எங்க அம்மா
அந்தா அது எங்க தாத்தா
எங்க அப்பாதான் ரொம்ப உடம்பு சரியில்லாம...
சரி...
ஏல உங்க தாத்தா பாட்டிக்கு பிடிச்ச பண்டங்களை எடுத்து கல்லறையில வைங்க...