Tuesday, 6 September 2016
நவீன உலகம் சிறு கதை
Monday, 29 August 2016
Monday, 8 August 2016
அப்பா – திரைவிமர்சனம்
இயக்கம்: சமுத்திரக்கனி
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் ம. நாதன்
படத்தொகுப்பு: ஏ.ம். ரமேஸ்
பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது…. குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கும் உண்டு… என்பது தான் சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான, தேவையான தமிழ் படம் “ அப்பா ”.
பிறந்தது முதல் விடலை பருவம் வரை குழந்தைகள் சந்திக்கும் சோதனைகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் சமுத்திரக்கனி ஒரு அப்பாவாக நின்று தீர்த்து வைப்பதுடன் குழந்தையின் திறமையை கண்டறிந்து அவனை சாதிக்க வைக்கிறார். இப்புடியும் குழந்தைகளை நல் வழியில் வளர்க்களாம் என வாழ்ந்து காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. நாளு பேருடைய பேச்சுக்காக வாழாமல் திறமைகளை வளர்த்து சாதனை படை என்றும் சமுகத்திற்கு கல்வி விசயத்தில் தன்னால் ஆன கருத்துக்களையும் கொடுத்துள்ளார்.
தம்பி ராமையாவின் நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தன் ஆசை, கனவு , இலட்சியம் எல்லாவற்றையும் மகன் மீது தினித்து அவனை அமெரிக்க வாழ் மருத்துவராக்க நினைப்பது முதல் இறுதியில் தன் மகனின் நிலை அறிந்ததும் தடுமாறி போகும் தம்பி ராமைய்யா சபாஸ்.
சமுத்திரக்கனிக்கு மகனாக வரும் காக்கா முட்டை விக்னேஸ் , அப்பாவுக்கு ஏத்த பிள்ளையாக வரும் ராகவ் , யுவ லட்சுமி , கேபரில்லா , தன் சாதனையால் உயரம் அடயும் நசாத் என எல்லாரும் அழகு மற்றும் சரியான தேர்வு.
காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும், அவர்கள் பெற்றோர்களை ஈர்க்கும் முறை பற்றியும் விளக்கும் சவாலான துணிச்சல் சமுத்திரக்கனிக்கு.
எதிர் பாலினம் பற்றிய புரிதலை மகனுக்கு கொடுக்கும் விதம் அமர்க்களம்.
திருநங்கை பற்றிய நேர்மறை எண்ணம் சபாஸ்.
குழந்தை பிறப்பின் போதும், மனைவி திருந்தி வீடு வரும் போதும் செடி நடுகின்ற காட்சியை அமைத்தது அருமை.
நெஞ்சை நிறைக்கும் வசனங்கள், சமுதாயத்திற்கு சவால்விடும் வசனங்கள் சமுத்திரக்கனியின் படத்தில் சாதனையே.
எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதையெல்லாம் செய், செல்ல முடியாதத செய்யாத…
விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில இருப்பபது விவசாயம்தான்…..
பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருசன் வீட்டுல கவுரமா வாழற வரைக்கும் தான்…
நீ ( கவர்மெண்ட் ஸ்கூல் மாணவன் ) நாட்டுக்கோழி, தனியார் பள்ளியில் படிக்குற மாணவன் பிராய்லர் கோழி…
உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள், உயர்த்துங்கள்… போன்ற அர்த்தம் பொதிந்த வசனங்கள் பலே…
மொத்தத்தில் அப்பா திரைப்படம் ஒரு சாதனை. கடிவாழம் போடப்பட்டிருக்கும் சமுகத்திற்கு தேவையான சாதனை … குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…..
Wednesday, 27 July 2016
gangai river in post office!!!
Tuesday, 26 July 2016
காட்சி தொடர்பியல் துறையின் தொடக்க விழா
Saturday, 23 July 2016
கபாலி திரைவிமர்சனம்
கதை கரு: மலேசிய தமிழ்ர்களுக்காக போரடும் தாதா…
டைரக்டர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஸ் நாரயணன்
கேமரா: முரளி
மலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலியாக வேலை பார்க்கும் தமிழர்களுக்காக ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்துடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றனர்.
அங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதைமருந்து கடத்துதல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொருப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துகட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார். அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறத்துபோனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்கின்றனர். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர்.
25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதைகடத்தல் கும்பல் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருப்பது அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும், குடும்பத்தோடு சேருவதும் மீதிக்கதை.
1).தமிழர்களை பற்றிய சில வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2).படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடியலையும் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
3).ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், கதை உருவமைப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
4).துப்பாக்கியை கையாளும் விதம் சில நேரங்களில் நகைச்சுவையாக உள்ளது.
சென்னையில் எடுக்கப்பட்ட பகுதி , ரஜினியின் கதாபாத்திரத்தையே உடைத்துவிட்டது. படத்தை மேலும் தொடர ஒரு நெருடலாகவே இருந்தது.
5).ஒரு சில நிகழ்வுகளை தவிர, கதை கரு எடுத்துக்காட்டிலே முடிந்துவிட்டது போல இருந்தது. தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதாகவே அமைந்துள்ளது, கபாலி. ஆக மலேசிய தமிழ் மக்களுக்காக போராடி சிறைசென்ற தாதா விடுதலையாகி குடும்பத்தை தேடுகிறார்… என்பதே கதை கரு.
6).தமிழ் மக்களை காப்பாற்றும் போராட்ட நிகழ்வு அதிகம் வைத்து குடும்ப தேடலை குறைத்திருந்தால் கபாலி வெற்றி பெற்றிருக்கலாம்.
7).என்னை கேட்டால் கபாலி வெற்றி பெறவில்லை என்றே கூறுவேன். எல்லாம் விளம்பரயுக்தி… மாயை…
8).கதை கருவே நன்றாக அமையவில்லை. இதற்கு போய் இப்படி ஒரு விளம்பரமா???
9).நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.