Thursday, 18 February 2016

"தமிழக தேர்தல்- 2016"

                             பாளையங்கோட்டை  தூய சவேரியார்  இல்லத்தில் மணவர்களுக்கு ஆளுமை திறனை வளர்க்கும் பொருட்டு இல்ல மாணவர்களுக்காக மாதத்தில் ஒரு முறை ''தலைவனாக'' எனும் சிறப்பு சொற்பொழிவு நடை பெற்று வருவது வழக்கம் .இம்முறை  எதிர் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி   "தமிழக தேர்தல்- 2016" எனும் தலைப்பில் திரு.பிரிட்டோ அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார் . இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது . 18.02.2016 அன்று மாலை 06:30 மணியளவில் சவேரியார் இல்லத்தில் உள்ள  தெரேசா அரங்கத்தில் இல்ல  இயக்குனர் அருட்தந்தை சகாயராஜ் சே .ச மற்றும் அருட்தந்தை வேதநாயகம் சே.ச மாணவ ஆலோசகர் அவர்களின் தலைமையில் நிகழ்சி நடைபெற்றது . இயக்குனர்  சகாயராஜ் சே.ச அவர்களின் வரவேற்புரையுடன் சொற்பொழிவு தொடங்கியது.
                           தமிழகத்தில்  தலைவர்களுக்கு பஞ்சமில்லை  ஆனால்  இவர்கள் மக்களுக்கான தலைவர்களா என்பது கேள்விகுறி என்ற துவக்கதுடன் மாணவர்களிடயே   சமுகத்தை பற்றிய உண்மைகளை எடுத்துவைத்தார். மேலும் தமிழகத்திலே நிகழும் பல்வேறு போராட்டங்கள் , தமிழகத்னை பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள் , இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு ,தமிழக இயற்கை வளம் , கல்வி ,  மருத்துவம் என்றும் அகில இந்திய கட்சிகள் மற்றும்  தமிழக கட்சிகள் பற்றியும் தன்னுடைய உரையில் இன்றைய சமுக நிகழ்வுகளை தொடுத்தார் . தேர்தலின் போது மட்டும் நம்மை தேடுவோரிடம் நாம் பல கேள்விகளை கேட்க வேண்டும் . இதுவரை என்ன செய்தீர்கள் ? இனிமேல் என்ன செய்ய போறீர்கள் ? என்ற மேலான கருத்தை மாணவர்களின்  மனதில் விதைத்துள்ளார் . மேலும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூரினர் . இல்ல மாணவர்களின் தலைவர் சதிஷ் குமார் சிறப்பு விருந்தினருக்கு அன்பளிப்பு வழங்கினார்.தலைவனாக சிறப்பு சொற்பொழிவு இல்ல இயக்குனர் சகாயராஜ் சே.ச அவர்களின் நன்ரிஉரைஉடன் இனிதே நிறைவேறிற்று .

Tuesday, 16 February 2016

எம் துறையில் Mass communication therioes கருத்தரங்கு

                     தூய சவேரியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் MASS COMMUNICATION THEORIES எனும் தலைப்பில் கருத்தரங்கு நேற்று ( 15.02.2016 ) மதியம் நடைபெற்றது. காட்சிதொடர்பியல்  துறையின் ஒருங்கினைப்பாளர் பேரா.ஆன்டோ கிங்ஸ்லி அவர்களும் துணை பேரா.சந்தோஷ் அவர்களும் தலைமைவகித்தனர். கருத்தரங்கினை துணை பேரா.சதிஷ் அவர்கள் வழங்கினார். இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துரையிலுள்ள மஹாராஜ கலை கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவி கெரன் சொருபா வரவேற்புரை ஆற்றினார். MASS COMMUNICATION THEORIES-ன் பல்வேறு வகைகள் மற்றும் வேறுபாடுகள் எடுத்துக்காட்டுடன் வழங்கப்பட்டது மேலும் தற்போதைய ஊடகம் பற்றிய விளக்கவுரையும் ஊடக நெறிமுறைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடைபெற்ற இந்த கருத்தரங்கினை துணை பேரா.சந்தோஷ் அவர்கள் கல்லூரியின் சார்பாகவும் காட்சிதொடர்பியல் துறையின் சார்பாகவும் நன்றியுரை ஆற்றி இனிதே நிறைவேற்றினார்.

Monday, 15 February 2016

நெஞ்சம் பொறுப்பதில்லையே...

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து...

       நெஞ்சம் பொறுப்பதில்லை
இந்த நிலை கெட்ட மானிடர்களை
           நினைக்கும் போது...

காதலை மட்டும் மையப்படுத்தும்
இயக்குனர்களை நினைக்கும் போது...

கவர்ச்சியை மட்டும் மையப்படுத்தும்
ஒளிர்பதிவாளர்களை நினைக்கும் போது...

பணத்தை மட்டும் மையப்படுத்தும்
தயாரிப்பாளர்களை நினைக்கும் போது...

புலன் உணர்வுகளை மட்டும் மையப்படுத்தும்
கதை ஆசிரியர்களை நினைக்கும் போது...

உடலை திரையிட்டு காட்டும்
கதாநாயகிகளை நினைக்கும் போது...

பிஸ்தாவாக தன்னை காட்டும்
கதாநாயர்களை நினைக்கும் போது...

Friday, 12 February 2016

எம் கல்லூரியில் தூய லூர்து அன்னை திருவிழா

                   பாளையங்கோட்டை , தூய சவேரியார் கல்லூரியில் (11.02.2016) மாலை 06:30 மணியளவில் தூய லூர்து அன்னை தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் தந்தை அருட்திரு.டேனிஸ் பொன்னையாS.J.துவக்கி வைத்தார். பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இயேசுசபை அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், சவேரியார் இல்ல மாணவர்கள், அன்னை தெரசா இல்ல மாணவிகள், திரு இருதய இல்ல மாணவர்கள், ஆசிரியப்பெருமக்கள், இறைமக்கள் என அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். 

                  பவனியானது கல்லூரி வளாகத்தின் மையத்திலிருக்கும் லூர்து அன்னை கெபிக்கு வந்தடைந்தது. அங்கே அருட்தந்தை.பிரிட்டோ வின்சென்ட் அன்னை மரியாள் " இரக்கத்தின் முகம் ","தாயை போல பிள்ளை நூலை போல சேலை" என்று அருமையான மறையுறை ஆற்றி நற்கருனை ஆசிர்வாதம் வழங்கினாா் . அன்னை மரியாளின் பாதத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக ஜெபித்து இறையாசிர் பெற்றனர். இறுதியாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை.அமல்ராஜ் S.J அவர்கள் நன்றியுறை ஆற்றினார்.தூய லூர்து அன்னை தேர்பவனி இனிதே நிறைவேறிற்று.

Thursday, 11 February 2016

நம் மொழி

        இந்தி மொழி மற்றும் பிற மொழிகள் நம் சமுகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வந்தாரை வரவேற்பதுதான் தமிழரின் பண்பாடு, வந்தாராக மாறுவது இல்லை. ஆனால் தற்போது வந்தாராக மாறுவதாகவே நாகரீகமாக மாறிவிட்டது. இதனால் இந்தி மற்றும் பிற மொழி பேசும் சமுகத்திலிருந்து வந்த மக்களால் நம் சமுகம் பல சிதைவுகளை கண்டுள்ளது என்று வெளிப்படையாகவே கூறலாம். நாம் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சூழல் இது.

        நம் நாகரீக உடைக்கலாச்சாரம் , மொழிக்கலாச்சாரம் , உறவுக்கலாச்சாரம் பாதிப்படையும் நிலைக்கு அவர்களும் ஒரு காரணியாகதான் இருக்கிறார்கள். இன்னும் பல சிதைவுகள் நம் பண்பாட்டை அழித்துவருகின்றன. திட்டமிட்டே செயல்படுத்துவார்களோ?? எனும் எண்ணம் எழுகிறது. எளிமையாக கூறினால் ......

      இந்திமொழி நாடகங்கள் (serial ) தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து நம்மை மாற்றிவருகிறது. மதுபாலா எனும் நாடகத்தை பார்த்து தமிழ்நாட்டு ஜவுளிக்கடைகளில் மதுபாலா சுடிதார் ஏகபோகமாக விற்கப்பட்டது. அதன்பின் மதுபாலா சுடிதார் விளம்பரதுறையிலும் பின் திறைத்துறையிலும் நுழைந்தது. பெரியவர்கள் தொடங்கி 4 வயது சிறுகுழந்தைகள் உட்பட மதுபாலா சுடிதார் பிரபலமாக்கப்பட்டது. ஏன்.... திருமணமான புது பெண்கள் இப்போது வரவேற்புக்கு ( Reception ) மதுபாலா சுடிதாரைத்தை உடுத்துகிறார்கள். ஒரு நாடகத்தால் மட்டும் இந்த தாக்கமென்றால் இன்னும் பல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நம் தொலைக்காட்சியிலே நடைபெறுகிறது.

       இந்த செய்தியை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென தெரியவில்லை ஏனெனில் இதன் நீட்ச்சி ஒவ்வொன்றாக வளர்ந்துகொண்டே செல்கிறது. நாம்தான் விளிப்போடு இருந்து எதனை வாங்குவது ,எதனை வாங்ககூடாது மற்றும் எதனை ஆதரிப்பது எதனை ஆதரிக்ககூடாது என்று சிந்தித்து செயல்படவேண்டும். நல்லதை பயன்படுத்த வேண்டும் அந்த நல்லதையே நம் பிள்ளைகளுக்கும் விட்டுசெல்லவேண்டும்...

Monday, 1 February 2016

ஆசிரியர்களே..

     

                 எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து தூக்குவது போலவும் இருந்தது.  மேலைநாடு மேலைநாடு என்கிறீர்களே உங்கள் மேலைநாடுகளில் ஆசிரியர்களை இப்படியா நடத்துகிறார்கள்?

                நம்ம ஆட்சியாளர்களை யாரோடு ஒப்பிடன்னு தெரியல.வாச்சதும் அப்படித்தான் இருக்கு, வந்ததும் அப்படித்தான் இருக்கு... தேர்தல் வேற வரப்போகுது.யாருக்கு ஓட்டுபோடன்னு தெரியல... 49ஒ தானா!!!