Monday, 12 September 2016
Thursday, 8 September 2016
தூய சின்னப்பர் திருத்தலம் வரலாறு சிங்கம்பாறை
சிங்கம்பாறை
புதிய ஆலயம் கி.பி.1901 ம் ஆண்டு வரை சேந்தமரம் பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது.
பின்னர் சிங்கம்பாறையானது வீரவநல்லூர் பங்குடன் இணைந்த கிளைப்பங்காக செயல்பட்டது. இப்போது
இருக்கும் புனித சின்னப்பரின் திருத்தலத்திற்கான அடித்தளமானது அருட்தந்தை. கபிரியேல்
அவர்களால் கி.பி 1901ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயத்தின் கட்டுமான பணிகள்
1929ல் அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நிறைவடைந்தது. இவ்வூரில் கோயில் கட்ட பலரும்
உழைத்தனர். தண்ணீருக்கு பதிலாக பதநீர் கொண்டே கட்டிடம் கட்டப்பட்டது. அருட்திரு. குத்தூரியர்
அடிகளார் ஏற்பாட்டாலும், மக்கள் உழைப்பாலும் ஆலயம், குருவானவர் இல்லம் மற்றும் கன்னியர்
இல்லம் கட்டப்பட்டது. இதில் மற்றொரு விசேஸம் என்னவென்றால் 6 மாதம் உடலை மூலதனமாக வைத்து
பனையேறும் தொழிலை செய்து வரும் இவ்வூர் மக்கள் மற்ற 6 மாதம் கோவில் பணியை சம்பளம் இல்லாமல்
செய்ததுதான். இதில் கோவில் வேலையென்றால் போட்டி போட்டுக்கொண்டு நடக்கும்.1845ஆம் ஆண்டு சிறிய ஓலைக் குடிசையாக கருவான எமது ஆலயம் இன்று திருத்தந்தை அவர்களால் திருத்தலமாக உருப்பெற்று உயர்ந்து நிற்கிறது. பாளைமறை மாவட்டத்திலேயே, புறவினத்தாரின் அப்போஸ்தலரான தூய சின்னப்பருக்கு திருத்தலம் தந்து முந்தி நிற்கும் சிறப்பு எம்மோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
Tuesday, 6 September 2016
நவீன உலகம் சிறு கதை
Monday, 29 August 2016
Monday, 8 August 2016
அப்பா – திரைவிமர்சனம்
இயக்கம்: சமுத்திரக்கனி
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் ம. நாதன்
படத்தொகுப்பு: ஏ.ம். ரமேஸ்
பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது…. குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கும் உண்டு… என்பது தான் சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான, தேவையான தமிழ் படம் “ அப்பா ”.
பிறந்தது முதல் விடலை பருவம் வரை குழந்தைகள் சந்திக்கும் சோதனைகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் சமுத்திரக்கனி ஒரு அப்பாவாக நின்று தீர்த்து வைப்பதுடன் குழந்தையின் திறமையை கண்டறிந்து அவனை சாதிக்க வைக்கிறார். இப்புடியும் குழந்தைகளை நல் வழியில் வளர்க்களாம் என வாழ்ந்து காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. நாளு பேருடைய பேச்சுக்காக வாழாமல் திறமைகளை வளர்த்து சாதனை படை என்றும் சமுகத்திற்கு கல்வி விசயத்தில் தன்னால் ஆன கருத்துக்களையும் கொடுத்துள்ளார்.
தம்பி ராமையாவின் நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தன் ஆசை, கனவு , இலட்சியம் எல்லாவற்றையும் மகன் மீது தினித்து அவனை அமெரிக்க வாழ் மருத்துவராக்க நினைப்பது முதல் இறுதியில் தன் மகனின் நிலை அறிந்ததும் தடுமாறி போகும் தம்பி ராமைய்யா சபாஸ்.
சமுத்திரக்கனிக்கு மகனாக வரும் காக்கா முட்டை விக்னேஸ் , அப்பாவுக்கு ஏத்த பிள்ளையாக வரும் ராகவ் , யுவ லட்சுமி , கேபரில்லா , தன் சாதனையால் உயரம் அடயும் நசாத் என எல்லாரும் அழகு மற்றும் சரியான தேர்வு.
காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும், அவர்கள் பெற்றோர்களை ஈர்க்கும் முறை பற்றியும் விளக்கும் சவாலான துணிச்சல் சமுத்திரக்கனிக்கு.
எதிர் பாலினம் பற்றிய புரிதலை மகனுக்கு கொடுக்கும் விதம் அமர்க்களம்.
திருநங்கை பற்றிய நேர்மறை எண்ணம் சபாஸ்.
குழந்தை பிறப்பின் போதும், மனைவி திருந்தி வீடு வரும் போதும் செடி நடுகின்ற காட்சியை அமைத்தது அருமை.
நெஞ்சை நிறைக்கும் வசனங்கள், சமுதாயத்திற்கு சவால்விடும் வசனங்கள் சமுத்திரக்கனியின் படத்தில் சாதனையே.
எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதையெல்லாம் செய், செல்ல முடியாதத செய்யாத…
விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில இருப்பபது விவசாயம்தான்…..
பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருசன் வீட்டுல கவுரமா வாழற வரைக்கும் தான்…
நீ ( கவர்மெண்ட் ஸ்கூல் மாணவன் ) நாட்டுக்கோழி, தனியார் பள்ளியில் படிக்குற மாணவன் பிராய்லர் கோழி…
உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள், உயர்த்துங்கள்… போன்ற அர்த்தம் பொதிந்த வசனங்கள் பலே…
மொத்தத்தில் அப்பா திரைப்படம் ஒரு சாதனை. கடிவாழம் போடப்பட்டிருக்கும் சமுகத்திற்கு தேவையான சாதனை … குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…..








